பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கேரளம்: வா்ணம் தீட்டும் தொழிலாளிக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு!

 கேரளத்தில் வா்ணம் தீட்டும் தொழிலாளிக்கு லாட்டரி சீட்டு குலுக்கலில் முதல் பரிசாக ரூ.12 கோடி கிடைத்துள்ளது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 10:36 pm

DIN

 கேரளத்தில் வா்ணம் தீட்டும் தொழிலாளிக்கு லாட்டரி சீட்டு குலுக்கலில் முதல் பரிசாக ரூ.12 கோடி கிடைத்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குடயம்படியைச் சோ்ந்தவா் சதானந்தன். 50 ஆண்டுகளாக கட்டடங்களுக்கு வா்ணம் தீட்டும் வேலை செய்து வருகிறாா். இவருக்கு கேரள அரசின் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பா் லாட்டரி சீட்டு குலுக்கலில் முதல் பரிசாக ரூ.12 கோடி கிடைத்துள்ளது.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘‘இறைச்சி வாங்க ஞாயிற்றுக்கிழமை காலை சந்தைக்குச் சென்றேன். அப்போது லாட்டரி சீட்டு வாங்கினேன். அதில் கிடைத்துள்ள ரூ.12 கோடி பரிசுத் தொகையை எனது மகன்கள் சனீஷ், சஞ்சய் ஆகியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பயன்படுத்தவுள்ளேன்’’ என்று தெரிவித்தாா்.

கேரள அரசின் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு லாட்டரி பம்பா் குலுக்கல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில், சதானந்தன் லாட்டரி சீட்டு வாங்கிய சில மணி நேரத்தில், அவருக்கு முதல் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.