திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

கத்தாரில் கரோனாவுக்கு 3 வாரக் குழந்தை பலி

கத்தாரில் கரோனா தொற்று பாதித்து மூன்று வாரக் குழந்தை உயிரிழந்துள்ளது. இது நாட்டில் தொற்றுநோய்க்குப் பலியாகும் இரண்டாவது குழந்தையாகும். 

News image
Updated On :17 ஜனவரி 2022, 6:59 am

DIN

கத்தாரில் கரோனா தொற்று பாதித்து மூன்று வாரக் குழந்தை உயிரிழந்துள்ளது. இது நாட்டில் தொற்றுநோய்க்குப் பலியாகும் இரண்டாவது குழந்தையாகும். 

பொது சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 

தொற்றுக்கு பலியான குழந்தைக்கு வேறு எந்தவிதமான மருத்துவ அறிகுறிகளும் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பாதித்து பலியாகும் இரண்டாவது குழந்தை இது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அனைத்து வயதினரும் கரோனா தொற்று பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். பொதுவாக கரோனா குழந்தைகளுக்கு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், உலகம் முழுவதும் தொற்று காரணமாக குழந்தைகள் பலியாகி வருகின்றனர். 

கத்தாரில் தற்போது ஏற்பட்டிருக்கும் கரோனா அலையில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பராமரிப்பு தேவைப்படுகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கரோனா தொற்றின் ஒருவகையான ஒமைக்ரான் வேகமாகவும், அதிகளவிலும் பரவி வருகின்றது.  

யுனிசெப் அளித்த தகவலின்படி, உலகளவில் கரோனா வைரஸால் 3.5 மில்லியன் இறப்புகளில் 0.4 சதவீதம் பேர் 20 வயதுக்குட்பட்டவர்களில் ஏற்பட்டுள்ளது. அதில், 9 வயது மற்றும் அதற்கு குறைவான வயதினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.