திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தில்லியில் 2,500 காவலர்களுக்கு கரோனா

தேசியத் தலைநகா் தில்லியில் 2,500 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, காவலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :17 ஜனவரி 2022, 10:26 am

DIN

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் 2,500 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, காவலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, 

காவல்துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 2,500 காவலர்கள் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தில்லி காவல்துறையின் செய்தித் தொடர்பாளரும், கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வாலுக்கு கரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. 

ஜனவரி 1 முதல் இன்று வரை சுமார் 2,500 காவலர்கள் கரோனாவுக்கு பாதிக்கப்பட்ட நிலையில், அதில் 767 பேர் குணமடைந்து மீண்டும் தங்கள் பணியில் சேர்ந்துள்ளனர். 

மேலும், தகுதியானவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்க அனைத்து நிலை காவலர்களுக்கும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தில்லி காவல்துறையில் சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் உள்ளனர். முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, தடுப்பூசி போடப்படாத காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். 

கரோனா தடுப்பூசியின் முன்னெச்சரிக்கை அளவை தெரிந்துகொள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளும் ஆரோக்கிய சேது மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.