கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் இல்லாமல் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதில், கோவா பேரவைக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப். 14இல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில் காங்கிரஸுடன் உடன்பாடு எட்டப்படவில்லை என புதன்கிழமை காலை தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சிவசேனையின் சஞ்சய் ரெளத் மற்றும் தேசியவாத காங்கிரஸின் ப்ரஃபூல் படேல் இணைந்து செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கோவா தேர்தலில் இணைந்து போட்டியிட நாங்கள் காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால், அது வீணானது. எங்களின் அழைப்புக்கு அவர்கள் எந்த பதிலும் தெரிவிக்காததால், சிவசேனை தேசியவாத காங்கிரஸ் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
40 தொகுதிகளிலும் கணிசமான தொகுதிகளில் போட்டியிடவுள்ளோம். முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடவுள்ளோம் எனத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

NDA கூட்டணியில் தவெக? செங்கோட்டையன் பதில்

நீதிக் கதைகள்! பழங்களின் விதைகளில் கடவுள்!

மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறை
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

