ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஒடிசாவில் உச்சத்தில் கரோனா: ஒரேநாளில் 11,607 பேருக்குத் தொற்று

ஒடிசாவில் மேலும் 11,607 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :19 ஜனவரி 2022, 7:00 am

DIN

ஒடிசாவில் மேலும் 11,607 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,607 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  இதுவரை மொத்த பாதிப்பு 11,67,094 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் 6 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 8,494 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 991 பேர் குழந்தைகள் ஆவார். 

கடந்த ஒரு நாளில் 69,502 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்ட நிலையில் 16.7 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

2,500-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் இருப்பின் சிவப்பு மண்டலமாகவும், 1000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளுக்கு மஞ்சள் மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.