ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உயில் இல்லாத பட்சத்தில் தந்தையின் சொத்துகளை பெற மகள்களுக்கு உரிமையுண்டு: உச்ச நீதிமன்றம்

இந்து வாரிசு சட்டத்தின்படி இந்து பெண்கள் மற்றும் கைம்பெண்களின் சொத்துரிமை குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :21 ஜனவரி 2022, 6:45 am

DIN

இந்து மதத்தைச் சேர்ந்த ஆண், உயில் எதுவும் எழுதிவைக்காத பட்சத்தில், அவர் தனியாக சேர்த்துவைத்த சொத்துக்களையும் இதர பிற சொத்துக்களையும் பெற அவரின் மகளுக்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்து வாரிசு சட்டத்தின்படி இந்து பெண்கள் மற்றும் கைம்பெண்களின் சொத்துரிமை குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

தந்தைக்கு சட்டப்பூர்வமான வாரிசு இல்லாத பட்சத்தில் அவர் தனியாக சேர்த்து வைத்த சொத்துகளை பெற மகளுக்கு உரிமை உண்டா?, சட்டம் என்ன சொல்கிறது போன்ற கேள்விகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர், கிருஷ்ண முராரி ஆகியோர் அமர்வு பதில் அளித்துள்ளது..

இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில்,"இறக்கும் நிலையில் இருக்கும் ஒரு ஆண் இந்துவின் சொத்து (உயில் இல்லாமல்) சுயமாகச் சம்பாதித்த சொத்தாகவோ அல்லது ஒரு காப்பாளர் அல்லது குடும்பச் சொத்தைப் பிரித்து வாங்கியதாகவோ இருந்தால், இறந்தவரின் சகோதரரின் மகன்/மகளை காட்டிலும் அதை பெறுதவற்கு அவரின் இந்து மகளுக்கே உரிமை உண்டு" எனக் குறிப்பிட்டுள்ளது.

நீதிபதி முராரி எழுதிய 51 பக்க தீர்ப்பில், "ஆண் இந்துவின் சொத்து - சுயமாகச் சம்பாதித்த சொத்தாகவோ அல்லது குடும்பச் சொத்தைப் பிரித்து வாங்கியதாகவோ இருந்தால் - அதை கைம்பெண் அல்லது மகள் பெறுவதற்கான உரிமையை பழைய இந்து சடடம் மட்டும் இன்றி பல நீதிமன்ற தீர்ப்புகள் நிலைநாட்டியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு சட்டப் பிரிவுகளை சுட்டிக்காட்டு எழுதப்பட்ட தீர்ப்பில், "இந்திய வாரிசு சட்டம் பிரிவு 14 (I), பெண்களுக்குச் சொந்தமான அனைத்து வரையறுக்கப்பட்ட சொத்துகளையும் முழுமையான சொத்துகளாக மாற்றுகிறது. உயில் இல்லாத பட்சத்தில், இப்படிப்பட்ட சொத்துகள் யாவும், யாருக்கு செல்ல வேண்டும் என்பதை இந்திய வாரிசு சட்டம் பிரிவு 15 விளக்குகிறது.

உயில் எதுவும் எழுதி வைக்காமல் ஒரு பெண் இந்து மரணம் அடைந்தால், அவரது தந்தை அல்லது தாயிடமிருந்து பெற்ற சொத்து அவரது தந்தையின் வாரிசுகளுக்குச் செல்லும், அதே சமயம் அவருடைய கணவன் அல்லது மாமனாரால் பெற்ற சொத்து அவரது கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்" என விளக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.