கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜார்க்கண்டில் ஆர்டிபிசிஆர், ஆர்ஏடி பரிசோதனை கட்டணங்கள் குறைப்பு

கரோனா பரிசோதனைகளான ஆர்டிபிசிஆர் மற்றும் விரைவு பரிசோதனை (ஆர்ஏடி) ஆகியவற்றுக்கான கட்டணங்களை ஜார்க்கண்ட் அரசு குறைத்துள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:08 am

DIN

கரோனா பரிசோதனைகளான ஆர்டிபிசிஆர் மற்றும் விரைவு பரிசோதனை (ஆர்ஏடி) ஆகியவற்றுக்கான கட்டணங்களை ஜார்க்கண்ட் அரசு குறைத்துள்ளது. இது உடனடியாக அமல்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. 

ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டணம் ரூ.400-இல் இருந்து ரூ.300 ஆகவும், ரேபிட் ஆன்டிஜென் (ஆர்ஏடி) சோதனைக் கட்டணம் ரூ.150ல் இருந்து, ரூ.100 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கரோனா மாதிரிகள் வீட்டிற்கு வந்த சேகரிக்க ரூ.100 செலுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா தனது சுட்டுரை பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அருண்குமார் சிங் கூறுகையில்,

பரிசோதனை செய்யப்படும் பொருட்களின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.