மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அடுத்த முக்கிய விக்கெட்டும் போச்சு...பின்னடைவை சந்தித்த பாஜக?

கடந்த 2014 முதல் 2017 வரை, கோவா முதல்வராக பொறுப்பு வகித்தவர் லட்சுமிகாந்த் பர்சேகர்.

News image
கோப்புப்படம்
Updated On :22 ஜனவரி 2022, 9:32 am

DIN

கோவா முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான லட்சுமிகாந்த் பர்சேகர், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்த நிலையில், கட்சியிலிருந்து விலகிவதாக அவர் அறிவித்துள்ளார்.

64 வயதான பர்சேகர் இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "கட்சியில் தொடர விருப்பமில்லை. இன்று மாலை, அதிகாரப்பூர்வமான ராஜிநாமா செய்யவுள்ளேன். தற்போது பதவி விலக முடிவு செய்துள்ளேன். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பின்னர் முடிவு செய்யப்படும்.

மாண்ட்ரேமில் உள்ள உண்மையான பாஜக தொண்டர்களை எம்எல்ஏ தயானந்த் சோப்தே புறக்கணித்து வருகிறார். இதன் காரணமாக அவர்கள் மத்தியில் பெரிய அளவில் அதிருப்தி நிலவுகிறது" என்றார்.

தேர்தல் அறிக்கை குழு தலைவராகவும் முக்கிய குழுவின் உறுப்பினராகவும் பர்சேகர் பதவி வகித்துவருகிறார். கடந்த 2002 முதல் 2017 வரை, மாண்ட்ரெம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக பர்சேகர் இருந்திருக்கிறார். வரும் தேர்தலில், பாஜக சார்பாக தற்போது எம்எல்ஏவாக உள்ள தயானந்த் சோப்தே, அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட பர்சேகர், பாஜகவின் தயானந்திடம் தோல்வி அடைந்தார். பின்னர், 2019ஆம் ஆண்டு, ஒன்பது முக்கிய நிர்வாகிகளுடன் காங்கிரஸிலிருந்து விலகி அவர் மீண்டும் பாஜகவில் இணைந்தார். 

கோவா முதல்வராக பொறுப்பு வகித்த மனோகர் பாரிகர், மத்திய அமைச்சரவையில் இணைக்கப்பட்ட பிறகு, கடந்த 2014 முதல் 2017 வரை, கோவா முதல்வராக பொறுப்பு வகித்தவர் லட்சுமிகாந்த் பர்சேகர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.