பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

கரோனா பரவல்: 9 மாநில சுகாதாரத் துறையுடன் ஜன.25-ல் ஆலோசனை

கரோனா பரவல் குறித்து 9 மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஜனவரி 25 ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

News image
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
Updated On :24 ஜனவரி 2022, 12:42 pm

DIN

கரோனா பரவல் குறித்து 9 மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை (ஜனவரி 25) ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல், பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட், தில்லி, லடாக், உத்தரப் பிரதேசம், சண்டிகர் ஆகிய 9 மாநில சுகாதாரத் துறையுடன் இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் கரோனா 3வது அலை அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்றும் பரவி வருகிறது. இதனைத் தடுக்க மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில் நாளை (ஜன.25) 9 மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் கரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார். 

இதில், ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல், பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட், தில்லி, லடாக், உத்தரப் பிரதேசம், சண்டிகர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.