மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பராமரிப்புக் காரணங்களுக்காக 9 மாதங்களில் 35,000 ரயில்கள் ரத்து

இந்தியாவில் பராமரிப்புக் காரணங்களுக்காக கடந்த 9 மாதங்களில் 35,026 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது

News image
Updated On :24 ஜனவரி 2022, 9:35 am

DIN

இந்தியாவில் பராமரிப்புக் காரணங்களுக்காக கடந்த 9 மாதங்களில் 35,026 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் , நாட்டில் மிகப்பெரிய போக்குவரத்துத் துறைகளில் ஒன்றான ரயில்வே துறையில் நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை பாதுகாப்புக் காரணங்களுக்குக்காக 35,026 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 41,483 ரயில்கள் திட்டமிட்ட நேரத்தைவிட தாமதமாக இயற்றப்பட்டதாகவும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1.25 லட்சம் கோடி மதிப்புள்ள 126 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு 3,416 ரயில்கள் ரத்தானதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.