ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அரசு அலுவலகங்களில் இனி அம்பேத்கர், பகத் சிங் படங்கள்: கேஜரிவால் அறிவிப்பு

தில்லி அரசு அலுவலகங்களில் முதல்வர், அரசியல் தலைவர்களின் படங்கள் இனி இடம்பெறாது என்று முதல்வர் கேஜரிவால் அறிவித்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :25 ஜனவரி 2022, 7:30 am

DIN

தில்லி அரசு அலுவலகங்களில் முதல்வர், அரசியல் தலைவர்களின் படங்கள் இனி இடம்பெறாது என்று முதல்வர் கேஜரிவால் அறிவித்துள்ளார். 

தில்லியில் குடியரசு தின விழாவையொட்டி, தன்னுடைய அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் கேஜரிவால் பின்னர் உரையாற்றினார். 

அப்போது, தலைநகர் தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறினார். மேலும், கரோனாவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையடுத்து, முக்கிய அறிவிப்பு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, 'தில்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும் இனி முதல்வர், அரசியல் தலைவர்களின் படங்கள் இடம்பெறாது. அதற்குப் பதிலாக, டாக்டர் அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் புகைப்படங்கள் இடம்பெறும்.

அவர்களின் கனவான முற்போக்கு மற்றும் வளமான இந்தியாவை நோக்கி உழைக்க இது நம் அனைவரையும் ஊக்குவிக்கும்' என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.