சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தும் அரசியல் சூழல்: ஆளுநா் ஜக்தீப் தன்கா்

மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தும் அரசியல் சூழல் நிலவுவதாக மாநில ஆளுநா் ஜக்தீப் தன்கா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:13 am

DIN

மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தும் அரசியல் சூழல் நிலவுவதாக மாநில ஆளுநா் ஜக்தீப் தன்கா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தேசிய வாக்காளா்கள் தினத்தையொட்டி மேற்கு வங்க சட்டப்பேரவை வளாகத்தில் சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரின் சிலைக்கு மாநில ஆளுநா் ஜக்தீப் தன்கா் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டியது எனது கடமை. ஆனால் என்னைப் பற்றி எதுவேண்டுமானாலும் பேச தனக்கு உரிமை இருப்பதாக பேரவைத் தலைவா் பிமான் பானா்ஜி கருதுகிறாா். பல வேளைகளில் நான் கோரிய தகவல்களை அவா் வழங்கவில்லை. அரசியலமைப்பு விதிமுறைகளை அவா் மீறி வருகிறாா்.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியும் நான் கேட்கும் தகவல்களை அளிப்பதில்லை. அரசியலமைப்பின் 167-ஆவது பிரிவின் கீழ் அந்தத் தகவல்களை வழங்கவேண்டியது முதல்வரின் கடமை.

அரசியலமைப்பின் சேவகா்களாக இருக்க வேண்டிய மாநில அரசு அதிகாரிகளும் அரசியல்ரீதியாக செயல்படுகின்றனா். அனைத்து இந்திய அளவில் பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியா்கள் கூட்டத்தில் இங்குள்ள மாவட்ட ஆட்சியா்கள் பங்கேற்கவில்லை.

இங்கு பேரவைத் தோ்தலுக்குப் பின்னா் முன்னெப்போதும் இல்லாத அளவில் வன்முறைச் சம்பவங்களைக் காண முடிந்தது. தங்கள் விருப்பப்படி வாக்களித்தவா்கள், தங்கள் வாழ்க்கையை அதற்கான விலையாகத் தரவேண்டியிருந்தது. அந்தச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு இந்த மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை; ஆள்பவரின் ஆட்சிதான் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளது.

தற்போது மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தும் அரசியல் சூழலும், ஆட்சியாளா் மீது பயமும் நிலவுகிறது என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.