அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாட்டில் புதிய கரோனா பாதிப்பு 4-வது நாளாகக் குறைந்தது

நாட்டில் இன்று நான்காவது நாளான புதிய கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 2.55 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
நாட்டில் புதிய கரோனா பாதிப்பு 4-வது நாளாகக் குறைந்தது
Updated On :25 ஜனவரி 2022, 3:48 am

DIN


புது தில்லி: நாட்டில் இன்று நான்காவது நாளான புதிய கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 2.55 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று புதிய கரோனா பாதிப்பு 3,06,064 ஆக இருந்த நிலையில், இன்று அதை விட 50 ஆயிரம் அளவுக்குக் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதையடுத்து, நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து நான்காவது நாளாகக் குறைந்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 614 பேர் நேற்று ஒரே நாளில் பலியாகியுள்ளனர். கரோனாவிலிருந்து ஒரே நாளில் 2.67 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை 162.92 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்பவர்களின் எண்ணிக்கை 22,36,842  ஆக உள்ளது. கரோனா சோதனை செய்பவர்களில் தொற்று உறுதியாகும் விகிதம் 15.52 சதவீதமாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.