நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம் ரஜினி படத்திற்குப் பின் சிலம்பரசனை இயக்கும் அஷ்வத் மாரிமுத்து!திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிக்கு செருப்பு மாலை அணிவித்த கிராம மக்கள்!சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு 3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின்
/

குடியரசு நாள்: எல்லையில் இனிப்பு பரிமாறிக் கொண்ட இந்திய - பாக். வீரர்கள்

இந்திய குடியரசு நாளையொட்டி அட்டாரி எல்லையில் இந்திய - பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் இனிப்பு பகிர்ந்து கொண்டாடினர்.

News image
Updated On :26 ஜனவரி 2022, 11:03 am IST

இந்திய குடியரசு நாளையொட்டி அட்டாரி எல்லையில் இந்திய - பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் இனிப்பு பகிர்ந்து கொண்டாடினர்.

நாடு முழுவதும் 73-வது குடியரசு நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றன. தில்லி ராஜபாதையில் தேசிய கொடியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றி வைத்து முப்படைகளின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில், இந்திய - பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினரும் இனிப்புகளையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.