மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தேர்வில் முறைகேடு: ரயிலுக்கு தீ வைத்த தேர்வர்கள்

பிகாரில் ரயில்வே தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி, பயணிகள் ரயிலுக்கு தேர்வர்கள் புதன்கிழமை தீ வைத்ததால் பரபரப்பு நிலவுகிறது.

News image
கயா ரயில் நிலையத்தில் தீ வைக்கப்பட்ட ரயில்
Updated On :26 ஜனவரி 2022, 8:50 am

DIN

பிகாரில் ரயில்வே தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி, பயணிகள் ரயிலுக்கு தேர்வர்கள் புதன்கிழமை தீ வைத்ததால் பரபரப்பு நிலவுகிறது.

ரயில்வே துறை நடத்திய சிபிடி -2 தேர்வில் முறைக்கேடு நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்யக் கோரி கயாவில் இன்று காலை முதல் தேர்வர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கயா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் பெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் ஆதித்யா குமார் கூறியதாவது:

தற்போது சூழல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ரயிலுக்கு தீ வைத்த சிலரை அடையாளம் கண்டுள்ளோம். அரசு பொருள்களை சேதப்படுத்தக் கூடாது என மாணவர்களை கேட்டுக் கொள்கிறோம். தேர்வு குறித்து விசாரிக்க அரசுத் தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாட்டில் 73-வது குடியரசு நாள் கொண்டாடி வரும் சூழலில் தேர்வு எழுதிய இளைஞர்கள் ரயிலுக்கு தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.