மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேரளம்: கரோனா பாதித்த 94% பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு -அமைச்சர் வீணா ஜார்ஜ்

கேரளத்தில் கரோனா தொற்று பாதித்த 94 சதவிகிதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

News image
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
Updated On :28 ஜனவரி 2022, 4:45 am

DIN

திருவனந்தபுரம்: கேரளத்தில் கரோனா தொற்று பாதித்த 94 சதவிகிதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: "கரோனா தொற்று பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளில் 94  சதவிகிதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 சதவிகிதம் பேருக்கு டெல்டா தொற்று பாதிப்பு உள்ளது." 

பிற இடங்களில் இருந்து கேரளம் வந்து தொற்று பாதித்தவர்களில் 80 சதவிகிதம் பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். மீதமுள்ள 20 சதவிகிதம் பேர் டெல்டா வகை தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். 

மேலும் கரோனா பாதித்தவர்களில் 3.6 சதவிகிதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும், அவர்களில் 0.7 சதவிகிதம் பேருக்கு ஆக்ஸிஜன் படுக்கைகள் தேவைப்படுவதாகவும் மற்றும் 0.6 சதவிதம் பேருக்கு ஐசியூ தேவைப்படுகிறது," கேரளத்தில் மூன்றாவது அலை ஒமைக்ரான் அலை என்பது தற்போது தெளிவாகியுள்ளது என்று அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.

கேரளத்தில் நேற்று புதிதாக மேலும் 51,739 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 58.26 லட்சமாக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.