டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பலி குறைவு, பாதிப்பு அதிகம்: கேரளத்தின் கரோனா நிலவரம்

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 51,570 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 14 பேர் உயிரிழந்தனர். 

News image
Updated On :30 ஜனவரி 2022, 3:21 pm

DIN


கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 51,570 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 14 பேர் உயிரிழந்தனர்.  

நேற்று 50,812 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.  

கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்கிய விவரங்கள் குறித்த தகவலை அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

அதில், கடந்த 24 மணிநேரத்தில் 1,03,366 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், 51,570 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், கேரளத்தில் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,83,515-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக எர்ணாகுளத்தில் 9,704 பேரும், திரிச்சூரில் 7,289 பேரும், திருவனந்தபுரத்தில் 5,746 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணிநேரத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 53,666-ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.