ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ராஜஸ்தானில் எண்ணெய் தொழிற்சாலையில் தீவிபத்து: 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

ராஜஸ்தானில் டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள். 

News image
கோப்புப்படம்
Updated On :30 ஜனவரி 2022, 1:20 pm

DIN

ராஜஸ்தானில் டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள். 

ராஜஸ்தான் மாநிலம், ஜாம்வா ராம்கர் பகுதியில் டர்பெண்டைன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொணடு வந்தனர். 

எனினும், இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானதாக வட்ட அதிகாரி ஷிவ்குமார் தெரிவித்தார். மேலும் தீவிபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.