வங்கிகளும் தொற்றுநோய் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது: பொருளாதார ஆய்வு

தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தை, வணிக வங்கி அமைப்புகளும் இதுவரை எதிர்கொண்டு வருவதாக திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2022 பொருளாதார ஆய்வறிக்கை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Published on
Updated on
1 min read

புது தில்லி: தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தை, வணிக வங்கி அமைப்புகளும் இதுவரை எதிர்கொண்டு வருவதாக திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2022 பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் இன்று காலை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. குடியரசுத் தலைவர் உரையைத் தொடர்ந்து, நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில் நடப்பு நிதியாண்டில் வணிக வங்கி அமைப்புகளும் தொற்றுநோய் தாக்கத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கணக்கெடுப்பின்படி, 2017-18 இல் திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளின் மொத்தம் செயல்படாத முன்பண விகிதம் 11.2 சதவிதத்திலிருந்து செப்டம்பர் 2021க்குள் 6.9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 

மேலும், எஸ்சிபிகளின் நிகர செயல்படாத முன்பண விகிதம் அதே காலகட்டத்தில் 6 சதவிதத்தில் இருந்து 2.2 சதவிகிதமாக குறைந்துள்ளது.

2021-22 ஆம் ஆண்டில் வங்கிக் கடன் வளர்ச்சியானது 2021 ஏப்ரலில் 5.3 சதவிகிதத்தில் இருந்து டிசம்பர் 31, 2021 நிலவரப்படி 9.2 சதவிகிதமாக படிப்படியாகத் துரிதப்படுத்தப்பட்டது என்றும் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

கரோனா தொற்று பாதிப்புகள் விவசாய துறையைப் பெரிய அளவில் பாதிக்காத நிலையில், விவசாயத் துறைகளுக்கான கடன் வளர்ந்துள்ளது. 2021-22ஆம் நிதியாண்டில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறை சுமார் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும். கடந்த ஆண்டு இதன் அளவு 3.6 சதவீதமாக இருந்தது. தொழில் துறையில் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது. 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் தொழில் துறை வளர்ச்சி 11.8 சதவிதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சேவைத் துறை இன்னும் மீண்டு வரவில்லை. ஆனால் 2021-22ஆம் நிதியாண்டில் 8.2 சதவீதம் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலதனச் சந்தைகளில் காளையின் ஓட்டத்தைக் குறிப்பிட்டு, 2021-22 சந்தைகளுக்கு விதிவிலக்கானது என்று கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் மற்றும் நவம்பர்  மாதங்களுக்கு இடையில், 75 ஐபிஓக்கள் மூலம் ரூ.89,066 கோடி திரட்டப்பட்டது, இது கடந்த பத்தாண்டுகளில் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் நிதியாண்டுக்கான வளர்ச்சி, அதாவது 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையிலான காலத்துக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com