கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ரூ.25.37 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்: ஒருவர் கைது

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ரூ.25.37 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :31 ஜனவரி 2022, 11:50 am

ஜெய்ப்பூர்:  ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ரூ.25.37 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில், துபையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வந்த ஒரு பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டபோது பாலிதீன் மாத்திரைகளில் மறைத்து உடலில் மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

ரூ.25,37,865 மதிப்புள்ள 99.50 சதவீதம் தூய்மையான 512.700 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை சுங்கத்துறைச் சட்டம் 1962 இன் விதிகளின் கீழ் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியையும் கைது செய்தனா். 

கைது செய்யப்பட்ட பயணியிடம் மேலதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.