ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ரூ.25.37 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்: ஒருவர் கைது

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ரூ.25.37 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
கோப்புப்படம்
Updated On :31 ஜனவரி 2022, 11:50 am

DIN

ஜெய்ப்பூர்:  ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ரூ.25.37 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில், துபையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வந்த ஒரு பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டபோது பாலிதீன் மாத்திரைகளில் மறைத்து உடலில் மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

ரூ.25,37,865 மதிப்புள்ள 99.50 சதவீதம் தூய்மையான 512.700 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை சுங்கத்துறைச் சட்டம் 1962 இன் விதிகளின் கீழ் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியையும் கைது செய்தனா். 

கைது செய்யப்பட்ட பயணியிடம் மேலதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.