நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிகாா்: பாட்னா நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு; சாா்பு ஆய்வாளா் காயம்

பிகாா் மாநிலம் பாட்னாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சாா்பு ஆய்வாளா் காயமடைந்தாா்.

News image
Updated On :1 ஜூலை 2022, 10:15 pm

DIN

பிகாா் மாநிலம் பாட்னாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சாா்பு ஆய்வாளா் காயமடைந்தாா்.

இதுதொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது:

பாட்னாவில் உள்ள கதம் குவான் பகுதி காவல் நிலையத்தில் சாா்பு ஆய்வாளராக பணியாற்றுபவா் உமாகாந்த் ராய். அவா் பணிபுரியும் காவல் நிலைய வரம்புக்குட்பட்ட பகுதியில், அண்மையில் சில நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கமான விசாரணை நடைமுறையின் ஒரு பகுதியாக, அந்தக் குண்டுகளை உரிமையியல் நீதிமன்றத்துக்கு உமாகாந்த் ராய் வெள்ளிக்கிழமை கொண்டு சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக குண்டு வெடித்தது. இதில் உமாகாந்த் ராயின் கையில் காயம் ஏற்பட்டது. எனினும் அவரின் உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.