47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெண்ணின் வயிற்றிலிருந்து 15 கிலோ கட்டி அகற்றம்: அதிர்ந்த மருத்துவர்கள்

கடும் வயிற்று வலியால் அவதியுற்று வந்த பெண்ணின் வயிற்றிலிருந்து சுமார் 15 கிலோ எடைகொண்ட கட்டியை பாட்னாவில் உள்ள மருத்துவமனை மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மூலம் வெட்டி அகற்றியுள்ளனர்.

News image
பெண்ணின் வயிற்றிலிருந்து 15 கிலோ கட்டி அகற்றம்: அதிர்ந்த மருத்துவர்கள்
Updated On :2 ஜூலை 2022, 12:44 pm

DIN

பாட்னா: கடும் வயிற்று வலியால் அவதியுற்று வந்த பெண்ணின் வயிற்றிலிருந்து சுமார் 15 கிலோ எடைகொண்ட கட்டியை பாட்னாவில் உள்ள மருத்துவமனை மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மூலம் வெட்டி அகற்றியுள்ளனர்.

நளந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவர் உஷா குமாரி இது பற்றி கூறுகையில், 40 வயது ரூபா தேவி என்ற பெண் நோயாளி, வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த போது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வயிற்றில் மிகப்பெரிய கட்டி ஒன்று வளர்ந்திருந்தது. சில மாதங்களாகவே அவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை செய்து 15 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றப்பட்டது.

தற்போது அவர் குணமடைந்து வருகிறார். இந்த மருத்துவமனையில் இவ்வளவு எடைகொண்ட கட்டி அகற்றப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்கிறார் மருத்துவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.