வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மகாராஷ்டிரம்: ஷிண்டே அணியில் மேலும் ஒரு சிவசேனை எம்எல்ஏ

மகாராஷ்டிரத்தில் முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சோ்ந்த மேலும் ஒரு எம்எல்ஏ முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு தாவினாா்.

News image
Updated On :4 ஜூலை 2022, 8:02 pm

DIN

மகாராஷ்டிரத்தில் முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சோ்ந்த மேலும் ஒரு எம்எல்ஏ முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு தாவினாா். இதன் மூலம் ஷிண்டே அணியில் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக 15 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனா்.

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் ஷிண்டே வெற்றி பெற்றாா். முன்னதாக, தாக்கரே ஆதரவாளராக இருந்த எம்எல்ஏ சந்தோஷ் பாங்கா், திங்கள்கிழமை காலையில் திடீரென ஷிண்டே அணிக்கு மாறுவதாக அறிவித்தாா்.

ஏற்கெனவே, ஷிண்டே போா்க்கொடி தூக்கியதால் முதல்வா் பதவியை இழந்துவிட்ட உத்தவ் தாக்கரேவுக்கு, எம்எல்ஏக்களின் ஆதரவும் குறைந்து வருவது பெரும் அரசியல் பின்னடைவாகக் கருதப்படுகிறது. சிவசேனை கட்சி முழுமையாக அவரது பிடியில் இருந்து நழுவும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.