எச்டிஎஃப்சி-எச்டிஎஃப்சி வங்கி இணைப்புக்கு ரிசா்வ் வங்கி ஒப்புதல்
வங்கித் துறையின் ஒழுங்காற்று அமைப்பான ரிசா்வ் வங்கி, எச்டிஎச்எஃப்சி நிறுவனத்தை எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைப்பதற்கான திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.


வங்கித் துறையின் ஒழுங்காற்று அமைப்பான ரிசா்வ் வங்கி, எச்டிஎச்எஃப்சி நிறுவனத்தை எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைப்பதற்கான திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து எச்டிஎஃப்சி வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
எச்டிஎஃப்சி நிறுவனத்தை வங்கியுடன் இணைக்கும் திட்டத்துக்கு ‘ஆட்சேபனை இல்லை’ என ரிசா்வ் வங்கி ஜூலை 4-ஆம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது என அந்த வங்கி தெரிவித்துள்ளது.
இந்த இணைப்பு திட்டத்துக்கு, இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ), தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயம் (என்சிஎல்டி) உள்ளிட்ட மேலும் பல ஒழுங்காற்று அமைப்புகளின் ஒப்புதலை பெற வேண்டியுள்ளது.
எச்டிஎஃப்சி வங்கியுடன் எச்டிஎஃப்சி நிறுவனத்தை இணைக்கும் திட்டத்துக்கு மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் அண்மையில் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...