மும்பை புறநகர் பகுதியில் 2500 கிலோவுக்கும் அதிகமாக மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதுடன், 10 பேர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை புறநகர் பகுதியான தியோநாரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு அளித்த தகவலின் பேரில் மும்பை காவல் துறையினர் காலை நேரத்தில் கத்கோபார்-மான்ஹர்டு இணைப்புச் சாலையில் காத்திருந்தனர். அப்போது மாட்டிறைச்சி ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, காவல் துறையினர் அவர்களிடமிருந்து மாட்டிறைச்சியினை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களையும் கைது செய்தனர்.
இது குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: “ நாங்கள் மூன்று வாகனங்களில் இருந்த மாட்டிறைச்சியினைப் பறிமுதல் செய்துள்ளோம். மாட்டிறைச்சியை வாகனங்களில் மாற்றிய 10 பேர் கைது செய்ய்ப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட மாட்டிறைச்சியின் மாதிரி சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விலங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


