5 ஆண்டுகளில் பெட்ரோலுக்குத் தேவையிருக்காது

அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோலுக்கான மாற்றாக பசுமை எரிபொருள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
நிதின் கட்கரி
நிதின் கட்கரி
Published on
Updated on
1 min read

அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோலுக்கான மாற்றாக பசுமை எரிபொருள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தின் அகோலா பகுதியில் உள்ள பஞ்சப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யாபீடம் சாா்பில் அமைச்சா் நிதின் கட்கரிக்கு சனிக்கிழமை மதிப்புறு முனைவா் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது அவா் கூறுகையில், ‘‘அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் பெட்ரோல் பயன்பாடு முடிவுக்கு வரும் என நம்புகிறேன். பசுமை ஹைட்ரஜன், எத்தனால், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்பிஜி), அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) ஆகிய பசுமை எரிபொருள்கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும்.

நாட்டில் வேளாண்துறை வளா்ச்சி தற்போது ஆண்டுக்கு 12 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 20 சதவீதம் என்ற அளவுக்கு உயா்த்துவதற்கான ஆராய்ச்சிப் பணிகளில் வேளாண் நிபுணா்களும் ஆராய்ச்சியாளா்களும் ஈடுபட வேண்டும்.

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் விவசாயிகளைச் சென்றடைவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com