முலாயம் சிங் யாதவ் மனைவி சாதனா குப்தா காலமானார்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா உடல்நலக் குறைவு காரணமாக இன்று குருகிராமில் உள்ள மருத்துவமனையில் காலமானார். 
முலாயம் சிங் யாதவ் மனைவி சாதனா குப்தா காலமானார்
முலாயம் சிங் யாதவ் மனைவி சாதனா குப்தா காலமானார்
Published on
Updated on
1 min read

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா உடல்நலக் குறைவு காரணமாக இன்று குருகிராமில் உள்ள மருத்துவமனையில் காலமானார். 

நீண்ட காலமாக உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்த சாதனா குப்தா, இன்று சிகிச்சை பலனின்றி குருகிராமில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அவரது உடல் மோசமடைந்ததையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார்.

சாதனா குப்தா, முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவியாவார். இவரது மகன் பிரதீக் யாதவ். பாஜகவைச் சேர்ந்த அபர்ணா யாதர், இவர்களது மருமகள் ஆவார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com