சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா உடல்நலக் குறைவு காரணமாக இன்று குருகிராமில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.
நீண்ட காலமாக உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்த சாதனா குப்தா, இன்று சிகிச்சை பலனின்றி குருகிராமில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: தமிழகத்தில் புதிதாக ஒரு ஸ்டாலினிசம்!
அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அவரது உடல் மோசமடைந்ததையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார்.
சாதனா குப்தா, முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவியாவார். இவரது மகன் பிரதீக் யாதவ். பாஜகவைச் சேர்ந்த அபர்ணா யாதர், இவர்களது மருமகள் ஆவார்.