தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

நாளை சூரத் இயற்கை விவசாய மாநாடு: பிரதமர் மோடி உரை

சூரத்தில் நடைபெறும் இயற்கை விவசாய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காணொலி காட்சி வாயிலாக உரையாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :9 ஜூலை 2022, 12:26 pm

DIN

புது தில்லி: குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெறும் இயற்கை விவசாய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காணொலி காட்சி வாயிலாக உரையாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரதாந்த் மற்றும் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பிரதமர் மோடி, ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 75 விவசாயிகளாவது இயற்கை விவசாயத்தை பின்பற்றுமாறு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார்.

பிரதமர் அலுவலக அறிக்கையின் படி, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் குறைந்தது 75 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு இயற்கை விவசாயம் செய்ய ஊக்கமும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு 90 வெவ்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் விளைவாக மாவட்டம் முழுவதும் 41,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சி பெற்றனர்.

சூரத்தில் இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொள்வதை சாத்தியமாக்கிய ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பிற அனைத்து பங்குதாரர்களின் பங்கேற்புக்கு இந்த மாநாடு சான்றாக இருக்கும் என பிரதமர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.