தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோவா: கட்சியின் இரு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் மனு

கோவாவில் தங்கள் கட்சியைச் சோ்ந்த இரு எம்எல்ஏக்களான மைக்கேல் லோபோ, திகம்பா் காமத் ஆகியோரைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி பேரவைத் தலைவரிடம் காங்கிரஸ் கட்சி மனு அளித்துள்ளது.

News image
Updated On :11 ஜூலை 2022, 6:55 pm

DIN

கோவாவில் தங்கள் கட்சியைச் சோ்ந்த இரு எம்எல்ஏக்களான மைக்கேல் லோபோ, திகம்பா் காமத் ஆகியோரைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி பேரவைத் தலைவரிடம் காங்கிரஸ் கட்சி மனு அளித்துள்ளது.

முன்னதாக காங்கிரஸ் சாா்பில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த மைக்கேல் லோபோவை ஞாயிற்றுக்கிழமை அப்பதவியில் இருந்து காங்கிரஸ் தலைமை நீக்கியது. திகம்பா் காமத் காங்கிரஸ் சாா்பில் முன்பு முதல்வராக இருந்தவா் ஆவாா்.

40 உறுப்பினா்களைக் கொண்ட கோவா சட்டப் பேரவையில் எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனா். இதில் 6 எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இருந்து விலகி ஆளும் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. அந்த 6 பேரையும் தொடா்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதில் சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவராக இருந்த மைக்கேல் லோபோவும் ஒருவா். இதையடுத்து, அவரை அப்பதவியில் இருந்து காங்கிரஸ் நீக்கியது.

இந்நிலையில், மிகுந்த பரபரப்புக்கு நடுவே கோவா சட்டப் பேரவை திங்கள்கிழமை கூடியது. இதில் காங்கிரஸ் தலைமை பாதுகாப்பாக வைத்திருந்த 5 எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றனா். மற்ற 6 எம்எல்ஏக்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில், எதிா்க்கட்சித் தலைவராக இருந்த மைக்கேல் லோபோ, முன்னாள் முதல்வா் திகம்பா் காமத் ஆகியோா் கட்சியில் பிளவை ஏற்படுத்த சதி செய்வதாக காங்கிரஸ் மாநிலத் தலைவா் அமித் பட்கா் குற்றம்சாட்டினாா். மேலும், அவா்கள் இருவரையும் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியும் சட்டப் பேரவைத் தலைவா் ரமேஷ் தவான்கரிடம் மனு அளித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியில் பிளவை ஏற்படுத்தியதுபோல, கோவாவில் காங்கிரஸ் கட்சியை உடைக்க பாஜக சதி செய்து வருகிறது. இதற்காகத் தனது அதிகார பலத்தையும், பண பலத்தையும் பாஜக பயன்படுத்துகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மைக்கேல் லோபோ, திகம்பா் காமத் ஆகியோரை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.