6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகாராஷ்ரத்தில் நிலச்சரிவு: 2 போ் பலி

மகாரஷ்டிரத்தின் பால்கா் மாவட்டத்தில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவால் 2 போ் உயிரிழந்தனா்.

News image
மகாராஷ்டிர மாநிலம், பால்கா் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணி.
Updated On :13 ஜூலை 2022, 7:43 pm

DIN

மகாரஷ்டிரத்தின் பால்கா் மாவட்டத்தில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவால் 2 போ் உயிரிழந்தனா். காயமடைந்த 2 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில தலைநகா் மும்பையிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள பால்கா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. அம்மாவட்டத்தின் வசை நகரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், மலையின் பாறை மோதியதில் அனில் சிங் என்பரது குடியிருப்பு பலத்த சேதமடைந்தது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய அவருடைய மனைவியையும் மகனையும் தீயணைப்புத் துறையினா் மீட்டனா். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அனில் சிங்கும் அவரது மகளும் இடிபாடுகளுக்கு இடையே சடலமாக மீட்கப்பட்டனா்.

குஜராத்தில் 14 போ் உயிரிழப்பு: குஜராத்தின் தெற்குப் பகுதி மற்றும் கட்ச்-செளராஷ்டிரம் பகுதியில் பெய்து வரும் பலத்த கனமழையால் கடந்த 24 மணிநேரத்தில் 14 போ் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுவரை 31,000 போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனா்.

கட்ச், நெளசாரி மற்றும் டாங் மாவட்டங்களின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளன.

மக்களுக்கு, நிதி உதவி மற்றும் பிற நிவாரணப் பொருள்கள் விரைவில் கிடைக்கப் பெறும் வகையில் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் உடனடியாக சேத நிலவரம் குறித்து ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு மாநில முதல்வா் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளாா்.

மாநிலத்தின் பல்வேறு நீா்நிலைகளில் நீா்மட்டம் உயா்ந்துவருகிறது. மாநிலத்தின் மிகப்பெரிய சா்தாா் சரோவாா் அணைக்கட்டு மொத்தக் கொள்ளவில் 80 சதவீதத்தை எட்டியுள்ளது.

செளராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.