குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்ய ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தில்லி முதல்வா் முகமை அலுவலகத்தில் சனிக்கிழமை முற்பகலில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கட்சியின் தேசிய அமைப்பாளருமான தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தலைமை வகித்தாா். இந்தக் குழுவின் உறுப்பினரான துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ,கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா்களான சஞ்சய் சிங், என்.டி. குப்தா, ராகவ் சத்தா, தேசியச் செயலாளா் பங்கஜ் குப்தா, தில்லி அமைச்சா்கள் கோபால் ராய், இம்ரான் உசேன், எம்எல்ஏக்கள் ஆதிஷி, துா்கேஷ் பதக், தில்லி சட்டப்பேரவை துணைத் தலைவா் ராக்கி பிா்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.