ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜகதீப் தன்கருக்கு நிதிஷ் குமார் ஆதரவு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜகதீப் தன்கருக்கு பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

News image
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜகதீப் தன்கருக்கு நிதிஷ் குமார் ஆதரவு
Updated On :16 ஜூலை 2022, 4:48 pm

DIN

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜகதீப் தன்கருக்கு பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நடைபெற உள்ள குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளரை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சனிக்கிழமை வெளியிட்டார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தன்கருக்கு பாஜக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தன்கருக்கு ஆதரவளிப்பதாக சனிக்கிழமை அறிவித்தார். 

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஐக்கிய ஜனதா தளம் அவருக்கு ஆதரவளிக்கும். அவருக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.