பாஜக கூட்டணியின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக ஜகதீப் தன்கர் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டார்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஜகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1951ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்த ஜகதீப் தன்கர் மேற்குவங்க ஆளுநராக பணியாற்றி வருகிறார். ராஜஸ்தானிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்கர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியுடனான மோதலில் பரவலாக அறியப்பட்ட தன்கர் 2019ஆம் ஆண்டு முதல் அம்மாநில ஆளுநராக பொறுப்பு வகித்து வருகிறார்.