நாடாளுமன்ற வளாகத்திற்கு சக்கர நாற்காலியில் வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 18 அமர்வுகளாக நடைபெறவுள்ளன. கூட்டத்தின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வாக்குப்பதிவு செய்த நிலையில், அனைத்து எம்.பி.க்களும் அடுத்தடுத்து வாக்குப்பதிவு செய்து வருகின்றனர். அதேபோல், அனைத்து மாநில பேரவைகளிலும் முதல்வர்கள் உள்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களது கட்சி ஆதரிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | குடியரசுத் தலைவர் தேர்தல்: தில்லியில் பிரதமர் மோடி வாக்களித்தார்
இந்நிலையில், சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மீண்ட முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், இன்று காலை சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
இன்று மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நாமக்கல்லில் ரூ. 40.16 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நூற்றாண்டு வளைவு விரைவில் திறப்பு

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கியதில் 2 போ் உயிரிழப்பு

பெருந்துறை சாகா் சா்வதேசப் பள்ளியில் படைப்பாற்றல் கண்காட்சி

இஸ்ரேல் தாக்குதல்! நாடாளுமன்றப் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தது லெபனான்!
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

