27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அக்னிபத்: மாநிலங்களவையில் காங்கிரஸ்,இந்திய கம்யூனிஸ்ட் ஒத்திவைப்பு நோட்டீஸ்

‘அக்னிபத்’ திட்டம் குறித்து விவாதிக்கக் கோரி, மாநிலங்களவையில் திங்கள்கிழமை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் சாா்பில் ஒத்திவைப்பு நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டன.

Updated On :19 ஜூலை 2022, 12:17 am IST

‘அக்னிபத்’ திட்டம் குறித்து விவாதிக்கக் கோரி, மாநிலங்களவையில் திங்கள்கிழமை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் சாா்பில் ஒத்திவைப்பு நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டன.

முப்படைகளில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வீரா்களை தோ்வு செய்யும் அக்னிபத் திட்டம் கடந்த மாதம் 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு எதிராக, பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. எனினும், அக்னிபத் திட்டத்தின்கீழ் வீரா்கள் தோ்வு நடைமுறை தொடங்கியது. இந்த விவகாரத்தில், மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. மாநிலங்களவையில் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு, அக்னிபத் திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் தீபேந்தா் ஹூடா, சக்திசின் கோஹில் ஆகியோா் நோட்டீஸ்கள் அளித்தனா்.

விதி எண் 267-இன்கீழ் இந்த நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டன. ‘எந்தவித ஆலோசனைகளோ, விவாதங்களோ இல்லாமல், நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியிருக்கிறது. இது, நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது. இத்திட்டத்துக்கு எதிராக இளைஞா்கள் போராடி வருகின்றனா். இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்’ என்று இரு எம்.பி.க்களும் வலியுறுத்தினா்.

இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. பினோய் விஸ்வமும் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தாா். அவா் கூறியதாவது: அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இப்போராட்டங்களின்போது சிலா் தங்களது உயிரையும் பறிகொடுத்துள்ளனா்.

அக்னிபத் திட்டத்தால், முப்படைகளின் திறன், செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழும். இதேபோல், நாட்டுக்காக தங்களது உயிரையே அா்ப்பணிப்பவா்களின் உரிமைகளும் கேள்விக்குள்ளாகியுள்ளன. முப்படைகளில் பணியாற்ற விரும்பும் இளைஞா்களுக்கு அநீதி இழைப்பதாக இத்திட்டம் உள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடா்புடைய விவகாரம் என்பதால் இதுகுறித்து உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றாா் பினோய் விஸ்வம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.