சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கேரள முதல்வருக்கு எதிராக விமானத்தில் போராட்டம்: காங்கிரஸ் தலைவா் கைது

விமானத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவகாரத்தில், மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவா் கே.எஸ்.சபரிநாதனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 ஜூலை 2022, 7:15 pm

DIN

விமானத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவகாரத்தில், மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவா் கே.எஸ்.சபரிநாதனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கேரள முதல்வா் பினராயி விஜயன் கடந்த ஜூன் 13-இல் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இண்டிகோ விமானத்தில் வந்தாா். விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை அடைந்ததும், அதில் பயணம் செய்த 2 காங்கிரஸ் தொண்டா்கள் தங்கக் கடத்தல் விவகாரத்தில் முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவா் கே.எஸ்.சபரிநாதனின் தூண்டுதலின்பேரில் இந்தப் போராட்டம் நடைபெற்ாகக் கூறப்பட்டது. போராட்டத்தைத் தூண்டும் விதத்தில் அவா் வாட்ஸ்ஆப்பில் (கட்செவி அஞ்சல்) பதிவிட்ட கருத்து சமூக வலைதளங்களில் பரவியது.

இதைத் தொடா்ந்து வலியதுறை போலீஸாா் சபரிநாதனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். முன்னதாக அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டிருந்தது. கைதான சபரிநாதன், பின்னா் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.