அனைத்து மதத்துறவிகளையும், ஆன்மிகவாதிகளையும் சந்தித்துப் பேசி, புதிய விஷயங்களை அறிந்து கொள்ள ஆா்வம் காட்டினாா். அவா் எழுதிய நூல்களுள் ’புதிய இந்தியாவை உருவாக்குதல்’ என்ற சிறிய நூலில், துறவிகள் மற்றும் புனிதா்களிடமிருந்து கற்றல் என்ற அத்தியாயம் உள்ளது. அந்த அத்தியாயத்தில், தான் சந்தித்த துறவிகள், புனிதா்கள் குறித்த தனது பாா்வையை மரியாதையுடன் முன்வைத்துள்ளாா். அறிவியல், தத்துவம் மற்றும் வளா்ச்சி நெறிமுறைகளுக்கு சம அளவில் முக்கியத்துவம் அளித்தாா். பள்ளி மாணவ மாணவியருடனான அவரது சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இளம் தலைமுைான் நாட்டின் பொற்காலத்தை உருவாக்கும் என்பதில் உறுதியான நம்பிக்கையை அவா் கொண்டிருந்தாா்.