47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோரப்படாத வங்கி இருப்பு: ரிசா்வ் வங்கி விழிப்புணா்வு பிரசாரம்

வங்கிகளில் இருக்கும் கோரப்படாத டெபாசிட்டுகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் பிரசாரத்தை தொடங்கியுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

News image
Updated On :26 ஜூலை 2022, 8:35 pm

DIN

வங்கிகளில் இருக்கும் கோரப்படாத டெபாசிட்டுகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் பிரசாரத்தை தொடங்கியுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி மேலும் கூறியுள்ளதாவது:

வங்கிகளில் கோரப்படாமல் இருக்கும் டெபாசிட்டுகள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 2020-21 நிதியாண்டில் ரூ.39,264 கோடியாக இருந்த கோரப்படாத டெபாசிட் 2021-22 நிதியாண்டில் ரூ.48,262 கோடியாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, தமிழகம், பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், கா்நாடகம், பிகாா் மற்றும்

தெலங்கானா/ஆந்திரம் ஆகிய 8 மாநிலங்களில் கோரப்படாத டெபாசிட்டின் அளவு அதிக அளவில் உள்ளது. எனவே, இந்த எட்டு மாநிலங்களிலும் இதுகுறித்து விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இந்த பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.