/

ஹைதராபாத் பாலியல் வன்கொடுமை: எம்எல்ஏ மகன் உள்பட 4 பேருக்கு ஜாமீன்

ஹைதராபாத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்ட 4 சிறார்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

News image
குற்றவாளிகள்
Updated On :27 ஜூலை 2022, 11:45 am

DIN

ஹைதராபாத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்ட 4 சிறார்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத்தில் கடந்த மே 28-ஆம் தேதி பகல்நேர கேளிக்கை விருந்தில் கலந்துகொண்ட 17 வயது சிறுமியை 3 சிறாா்கள் உள்ளிட்ட 6 போ் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியதாகப் புகாா் எழுந்தது.

அதன் காரணமாக, இந்த வழக்கு தொடர்பாக 6 பேரைக் கைது செய்து காவல்துறையினர் சிறையிலடைத்தனர். அதில், 5 பேர் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும், கைது செய்யப்பட்ட சிறுவர்களில் ஒருவர் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்எல்ஏவின் மகன்.

இந்நிலையில், அந்த 5 பேரில் ஒருவரைத் தவிர்த்து எம்எல்ஏ மகன் உள்பட 4 பேருக்கு சிறார் நீதி வாரியம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளும் விசாரணை அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும், ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள்கிழமை மாவட்ட நன்னடத்தை அலுவலரிடம் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.