அசாம்: லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள் கைது

அசாமில் லஞ்சம் வாங்கிய இரண்டு அரசு ஊழியர்கள் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 
அசாம்: லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள் கைது
Published on
Updated on
1 min read

அசாமில் லஞ்சம் வாங்கிய இரண்டு அரசு ஊழியர்கள் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

காவல் துறையினர் அதிரடியாக மேற்கொண்ட சோதனையில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் அசாமின் மோரிகயோனைச் சேரிந்தவர். மற்றொருவர் தீப்ருஹரைச் சேர்ந்தவர். 

இது குறித்து காவல் துறை சிறப்பு டிஜிபி ஜிபி சிங் கூறியதாவது: “லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான எங்களது இந்த கைது நடவடிக்கை தொடரும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள இரண்டு அரசு அதிகாரிகள் மீதும் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com