
அசாமில் லஞ்சம் வாங்கிய இரண்டு அரசு ஊழியர்கள் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறையினர் அதிரடியாக மேற்கொண்ட சோதனையில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் அசாமின் மோரிகயோனைச் சேரிந்தவர். மற்றொருவர் தீப்ருஹரைச் சேர்ந்தவர்.
இதையும் படிக்க: அதர்வாவின் ‘குருதி ஆட்டம்' டிரைலர் வெளியீடு
இது குறித்து காவல் துறை சிறப்பு டிஜிபி ஜிபி சிங் கூறியதாவது: “லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான எங்களது இந்த கைது நடவடிக்கை தொடரும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள இரண்டு அரசு அதிகாரிகள் மீதும் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.