தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மும்பை: குடும்பத்துடன் தற்கொலை, 3 வயது குழந்தை உட்பட 4 பேர் பலி

மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டதில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

News image
Updated On :29 ஜூலை 2022, 2:33 pm

DIN

மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டதில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பை சிவாஜி நகர் பகுதியில் இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவத்தில் சஹீல் ஜலீல் கான் (34 வயது), அவரது மனைவி நசியா சஹீல் கான் மற்றும் அவரது இரு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து காவல் துறை தரப்பில் கூறியிருப்பதாவது: “ சம்பவம் நடந்த வீட்டின் கதவு உள் பக்கமாக தாழிடப்பட்டுள்ளது. அதனால், அவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். காவல் துறைக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தப் பிறகு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் சஹீல் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தரையிலும் இறந்து கிடந்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறந்த அந்த 4 பேரின் உடல்களும் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.