விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று கடற்கரையில் குளிக்கும்போது அடித்துச் செல்லப்பட்ட 5 பொறியியல் மாணவர்களின் உடல்களையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
புதிமடகா கடற்கரையில் நேரிட்ட இந்த துயர சம்பவத்தில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 5 பொறியியல் மாணவர்களையும் தேடும் பணியில் இரண்டு ஹெலிகாப்டர்கள், 4 படகுகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் மீட்புப் பணியை முடித்துக் கொண்டது இந்திய கடற்படை.
வெள்ளிக்கிழமையன்று கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஆறு மாணவர்களில் ஒருவர், அங்கிருந்த மாணவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில், மற்ற ஐந்து பேரின் உடல்களும் இன்று மீட்கப்பட்டன.
இந்த மீட்புப் பணியில் உள்ளூர் மீனவர்களும் 20 படகுகளும் ஈடுபட்டன. 15 பொறியியல் மாணவர்கள் கடற்கரைக்குச் சுற்றுலா வந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நிகழ்ந்த இடம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமில்லை என்றும், இங்கு அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


