தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆந்திர கடற்கரையில் அடித்துச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உடல்கள் மீட்பு

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று கடற்கரையில் குளிக்கும்போது அடித்துச் செல்லப்பட்ட 5 பொறியியல் மாணவர்களின் உடல்களையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

News image

ஆந்திர கடற்கரையில் அடித்துச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உடல்கள் மீட்பு (கோப்பிலிருந்து)

Updated On :30 ஜூலை 2022, 12:13 pm


விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று கடற்கரையில் குளிக்கும்போது அடித்துச் செல்லப்பட்ட 5 பொறியியல் மாணவர்களின் உடல்களையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

புதிமடகா கடற்கரையில் நேரிட்ட இந்த துயர சம்பவத்தில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 5 பொறியியல் மாணவர்களையும் தேடும் பணியில் இரண்டு ஹெலிகாப்டர்கள், 4 படகுகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் மீட்புப் பணியை முடித்துக் கொண்டது இந்திய கடற்படை.

வெள்ளிக்கிழமையன்று கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஆறு மாணவர்களில் ஒருவர், அங்கிருந்த மாணவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில், மற்ற ஐந்து பேரின் உடல்களும் இன்று மீட்கப்பட்டன.

இந்த மீட்புப் பணியில் உள்ளூர் மீனவர்களும் 20 படகுகளும் ஈடுபட்டன. 15 பொறியியல் மாணவர்கள் கடற்கரைக்குச் சுற்றுலா வந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நிகழ்ந்த இடம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமில்லை என்றும், இங்கு அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.