
நாடு முழுவதும் மதுபான வியாபாரிகள் உள்பட பல்வேறு குழுக்களைச் சேர்ந்த சுமார் 400 இடங்களில் வருமானவரித் துறையினர் புதன்கிழமை சோதனையைத் தொடங்கியுள்ளனர்.
ஹரியாணவின் குருகிராம், மும்பை, தில்லி உள்பட 5 மாநிலங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றது.
மும்பையில், பாந்த்ரா குர்லா வளாகத்தில் அமைந்துள்ள தூதரக குழுமத்தின் அலுவலகத்தை வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
சோதனை நடைபெறும் வரை யாரும் அலுவலகத்தை விட்டு வெளியேறவோ, உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை
வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக சந்தேகம் அரசு நிறுவனத்திற்கு உள்ள நிலையில், குருகிராமில், மதுபானம் விற்பனை செய்யும் தொழிலதிபரின் அலுவலகத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பல்வேறு இடங்களில் தெகாடர்ந்து சோதனை நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.