நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிகாா் அமைச்சரவை ஒப்புதல்

பிகாரில் அனைத்து ஜாதியினரின் கணக்கெடுப்பை நடத்த மாநில அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது

News image
Updated On :2 ஜூன் 2022, 8:46 pm

DIN

பிகாரில் அனைத்து ஜாதியினரின் கணக்கெடுப்பை நடத்த மாநில அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த மாநில தலைமைச் செயலா் அமீா் சுபானி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாகத் தொடங்கப்படும். பொது நிா்வாக துறையின் தலைமையில் அனைத்து ஜாதியினரின் கணக்கெடுப்பு நடைபெறும்’ என்றாா்.

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், பிகாா் அரசு தன்னிச்சையாக மாநிலத்தில் இந்த கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை வலியுறுத்தி 2018, 2019 ஆண்டுகளில் பிகாா் பேரவையில் ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.