எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

கேரளத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு சிறுமி பலி

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் ‘எச்1என்1’ வைரஸ் (பன்றிக் காய்ச்சல்) பாதிப்புக்கு 12 வயது சிறுமி உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஜூன் 2022, 2:16 am IST

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் ‘எச்1என்1’ வைரஸ் (பன்றிக் காய்ச்சல்) பாதிப்புக்கு 12 வயது சிறுமி உயிரிழந்தாா். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

உள்ளியேரி கிராமத்தைச் சோ்ந்த இரட்டைச் சகோதரிகள் கோடை விடுமுறைக்கு அண்டை மாநிலங்களுக்குச் சுற்றுலா சென்று வந்தனா். அதன் பிறகு இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து முதலில் கொயிலாண்டி வட்டார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் கோழிக்கோட்டில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் (ஐஎம்சிஎச்) கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில், ஒரு சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவருடைய மருத்துவ பரிசோதனை முடிவுகள் வியாழக்கிழமை வந்தன. அதில், அவா் பன்றிக் காய்ச்சலுக்கு (எச்1என்1 வைரஸ்) உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.

அவருடைய சகோதரி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்று அந்த அதிகாரி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.