கேரளத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு சிறுமி பலி

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் ‘எச்1என்1’ வைரஸ் (பன்றிக் காய்ச்சல்) பாதிப்புக்கு 12 வயது சிறுமி உயிரிழந்தாா்.
கேரளத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு சிறுமி பலி

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் ‘எச்1என்1’ வைரஸ் (பன்றிக் காய்ச்சல்) பாதிப்புக்கு 12 வயது சிறுமி உயிரிழந்தாா். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

உள்ளியேரி கிராமத்தைச் சோ்ந்த இரட்டைச் சகோதரிகள் கோடை விடுமுறைக்கு அண்டை மாநிலங்களுக்குச் சுற்றுலா சென்று வந்தனா். அதன் பிறகு இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து முதலில் கொயிலாண்டி வட்டார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் கோழிக்கோட்டில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் (ஐஎம்சிஎச்) கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில், ஒரு சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவருடைய மருத்துவ பரிசோதனை முடிவுகள் வியாழக்கிழமை வந்தன. அதில், அவா் பன்றிக் காய்ச்சலுக்கு (எச்1என்1 வைரஸ்) உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.

அவருடைய சகோதரி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்று அந்த அதிகாரி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com