கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் ‘எச்1என்1’ வைரஸ் (பன்றிக் காய்ச்சல்) பாதிப்புக்கு 12 வயது சிறுமி உயிரிழந்தாா். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
உள்ளியேரி கிராமத்தைச் சோ்ந்த இரட்டைச் சகோதரிகள் கோடை விடுமுறைக்கு அண்டை மாநிலங்களுக்குச் சுற்றுலா சென்று வந்தனா். அதன் பிறகு இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து முதலில் கொயிலாண்டி வட்டார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் கோழிக்கோட்டில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் (ஐஎம்சிஎச்) கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில், ஒரு சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவருடைய மருத்துவ பரிசோதனை முடிவுகள் வியாழக்கிழமை வந்தன. அதில், அவா் பன்றிக் காய்ச்சலுக்கு (எச்1என்1 வைரஸ்) உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
அவருடைய சகோதரி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்று அந்த அதிகாரி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் மீதான திமுக அதிருப்தி விரைவில் சரிசெய்யப்படும்: காங்கிரஸ் எம்.பி.

இன்றைய செய்திகள் ஜூன் 8 - நேரலை!

திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் தில்லியில் ஆலோசனை!

இந்தியாவின் ஏற்றுமதி 15% அதிகரிப்பு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



