புதுதில்லி: உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவினாலும், 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் மே மாதம் வரையான காலத்தில் நாட்டின் சரக்கு ஏற்றுமதி சுமார் 15 சதவீத வளர்ச்சி பதிவு செய்ததாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
வர்த்தக அமைச்சகம் மே மாதத்திற்கான வர்த்தகத் தரவுகளை ஜூன் 15 அன்று வெளியிடும் நிலையில், இவ்விரு மாதங்களில் ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்ததன் விளைவாக, ஏப்ரல் மாத ஏற்றுமதி 13.78 சதவீதம் அதிகரித்து 43.56 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்ததுள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச ஏற்றுமதி அளவாகும். இருப்பினும், இறக்குமதி அதிகரித்ததால் வர்த்தகப் பற்றாக்குறை 28.38 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.
Summary
The country's merchandise exports have recorded about 15 per cent growth during April-May 2026-27.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

1.6.1976: தானியத்தைச் சேமிக்க பள்ளிக் கட்டடங்களும் பயன்படுத்தப்படலாம்

ஏப்ரல் சரக்கு ஏற்றுமதி 13.78% அதிகரிப்பு!

ரூ. 184 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற எச்எஃப்சிஎல்!

2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 86,311 கோடி டாலா்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP




