மும்பை: அரசியல் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க டாலர் வலுவடைந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வால், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 56 காசுகள் சரிந்து ரூ. 95.74 ஆக நிலைபெற்றது.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வால், அமெரிக்க டாலர் ஏற்றம் கண்டதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.35 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகான வர்த்தகத்தின் போது இது அதிகபட்சமாக ரூ. 95.15 வரை உயர்ந்தது. வர்த்தக இறுதியில், அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 56 காசுகள் சரிவுடன் ரூ. 95.74 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.
முன்னதாக வெள்ளிக்கிழமையன்று, அந்நிய மூலதன வரவை ஆதரிக்கவும், அந்நியச் செலாவணி பணப்புழக்கத்தை வலுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை அறிவித்ததைத் தொடர்ந்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 56 காசுகள் உயர்ந்து ரூ. 95.18 ஆக முடிவடைந்தது.
Summary
The rupee depreciated 56 paise to settle at 95.74 against dollar on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










