கர்நாடகத்தில் இன்று முதல் நான்கு நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
பெங்களூரு நகரம், பெங்களூரு கிராமம், தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மற்றும் உடுப்பின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
ஹாசன், ஷிவமொக்கா, ராமநகர், குடகு மற்றும் சிக்கமகளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
தெற்கு கர்நாடகத்தின் மைசூரு, மாண்டியா, சாமராஜநகர் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். பெங்களூரு மற்றும் கடலோர மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வட கர்நாடக மாவட்டங்களான பாகல்கோட், பிதார், கடக், கொப்பல், ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்படாது.
மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 7.5 முதல் 15 மிமீ வரை கனமழையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

