கர்நாடகத்தில் இன்று முதல் நான்கு நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
பெங்களூரு நகரம், பெங்களூரு கிராமம், தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மற்றும் உடுப்பின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
ஹாசன், ஷிவமொக்கா, ராமநகர், குடகு மற்றும் சிக்கமகளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
தெற்கு கர்நாடகத்தின் மைசூரு, மாண்டியா, சாமராஜநகர் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். பெங்களூரு மற்றும் கடலோர மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வட கர்நாடக மாவட்டங்களான பாகல்கோட், பிதார், கடக், கொப்பல், ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்படாது.
மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 7.5 முதல் 15 மிமீ வரை கனமழையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆஸ்கர் விருது விழா தொடங்கியது.. ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், ஃபிராங்கன்ஸ்டைன் படங்களுக்கு விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ

சட்டப்பேரவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்கள் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

