எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கரோனா

கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்ப்டடுள்ளது. 

News image
Updated On :3 ஜூன் 2022, 9:00 am

DIN

கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்ப்டடுள்ளது. 

இதுகுறித்து அவர் தனது சுட்டுரை பக்கத்தில் அளித்த தகவலில், 

கரோனாவின் மூன்று அலைகளில் பாதிக்கப்படாமல் இருந்த எனக்கு தற்போது கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

எனக்கு லேசான தொற்று அறிகுறிகள் உள்ளதால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். கரோனாவின் அனைத்து முன்தடுப்பு நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்றி வந்துள்ளேன். நான் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளேன் என்று அவர் வியாழன் இரவு கூறினார்.

மேலும், கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார். 

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 297 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளன. இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், நேர்மறை விகிதம் 1.45 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அண்டை மாநிலங்களான கேரளம், மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று திடீர் அதிகரித்து வருவதால் கர்நாடக அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.