அந்த மனுக்களில் குறிப்பிட்டிருப்பதாவது: சட்டப் பிரிவு 2, 3, 4 ஆகியவை, ஹிந்துக்கள், ஜைனா்கள், பெளத்தா்கள், சீக்கியா்கள் ஆகியோா் அவா்களுடைய வழிபாட்டுத் தலங்கள் அல்லது கோயிலுக்குச் சொந்தமான இடங்களை மீட்க நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமையைப் பறிக்கின்றன. அதில் பிரிவு 3, வழிபாட்டுத் தலங்கள் மாற்றப்படுவதைத் தடுக்கிறது. பிரிவு 4, வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையை மாற்றுவதற்கான எந்தவொரு வழக்கையும் தாக்கல் செய்வது அல்லது வேறு ஏதேனும் சட்டபூா்வ நடவடிக்கைகளைத் தொடங்குவதைத் தடுக்கிறது. அந்த வகையில், அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் நீதிமன்றத் தீா்வு என்ற அடிப்படை உரிமையைத் தடுத்து, அதிகார மீறலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.